அரியவகை நோய் பாதிப்பா? நந்திதா கூறிய தகவல்…

by vignesh

தமிழில் அட்டக்கத்தி, முண்டாசுப்பட்டி, புலி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை நந்திதா, அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறாராம்.

தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்த அவர் பா.இரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்ததோடு, மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

அட்டக்கத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து பேமஸ் ஆனார் நந்திதா. பின்னர் இவருக்கு நடிகர் விஜய்யுடன் புலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படம் பிளாப் ஆனதால் படிப்படியாக பட வாய்ப்புகளை இழந்து வந்த நந்திதா, ஒரு கட்டத்தில் தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு திரையுலகிற்கு தாவினார்.

டிகை நந்திதா நடிப்பில் ஹிடிம்பா என்கிற தெலுங்கு திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படம் வருகிற ஜூலை 20-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் படு ஜோராக நடைபெற்று வருகிறது.

ஹிடிம்பா படத்தின் புரமோஷனுக்காக பேட்டி ஒன்றை அளித்திருந்த நடிகை நந்திதா, அதில் தனக்கு இருக்கும் அரிய வகை நோய் பாதிப்பு குறித்து மனம்திறந்து பேசி உள்ளார். அதன்படி தனக்கு ஃபைப்ரோமியால்ஜியா என்கிற தசைக் கோளாறு நோயால் அவதிப்படுவதாக அவர் கூறி உள்ளார். இந்த நோய் பாதிப்பால் உடல் எடையில் ஏற்ற இறக்கம் ஏற்படும் என்றும், ஒரு சின்ன வேலை செய்தால் கூட தசைகளில் பிரச்சனை ஏற்பட்டுவிடும் அளவுக்கு இந்த நோய் தீவிரமானது என கூறி உள்ள அவர், இதன் காரணமாக தான் கடினமான உடற்பயிற்சிகளை செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

நோயால் அவதிப்படுவதை அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment