ஜிகர்தண்டா 2’பற்றி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் !!

by vignesh

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘ஜிகர்தண்டா 2′.  இந்தப் படம் தீபாவளியன்று வெளியாகிறது. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது:

‘ஜிகர்தண்டா’ படத்தின் சேது கேரக்டருக்கு முதலில் ராகவா லாரன்ஸிடம்தான் நடிக்கக் கேட்டேன். அப்போது சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது. படம் வெளியானபிறகு அவர், சேர்ந்து படம் பண்ணலாம் என்றார்.

இந்தப் படம் 1975-ல் நடக்கும் கதையைக் கொண்டது.‘ஜிகர்தண்டா’வுக்கும் இந்தப் படத்துக்கும் தொடர்பில்லை. இதில் ராகவா லாரன்ஸ் கேங்ஸ்டராகவும் எஸ்.ஜே.சூர்யா சினிமா இயக்குநராகவும் நடித்திருக்கிறார்கள்.  படத்தை மலைக்கிராமம் ஒன்றில் படமாக்கினோம். அந்த கிராமத்தைச் சேர்ந்த 65 பேரைத் தேர்வு செய்து, சூரி என்பவர் மூலம் 2 மாதம் பயிற்சி அளித்தோம். அவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

You may also like

Leave a Comment