மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இளையராஜா???

by vignesh

பிரபல இசையமைப்பாளர் பரணியை பார்த்து இளையராஜா நீ யார் என கேட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.
தமிழ் சினிமா இசை என்றால் எஸ்.எஸ்.வி – ராமமூர்த்தி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ்.ஏ.ராஜ்குமார், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் உள்ளிட்டவர்களைத்தான் பெரும்பாலும் உடனே தங்களது நினைவுக்கு ரசிகர்கள் கொண்டுவருவார்கள். ஆனால் இவர்கள் தவிர சந்திரபோஸ், சிற்பி உள்ளிட்டோரும் மிகச்சிறந்த இசையை கொடுத்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் பரணி

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்து 1999ஆம் ஆண்டு வெளியான பெரியண்ணா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் இசையமைத்த அத்தனை பாடல்களும் மெகா ஹிட்டடித்தன

ஒரு விழாவில் இளையராஜாவின் அருகில் அமரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அவர் என்னை பார்த்து, ‘யார் நீ?’என கேட்டார். உடனே நான் இசையமைத்த படங்களை சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டேன். அதற்கு அவரோ, ‘ஓ அப்படியா’ என்றதோடு மட்டும் நிறுத்திக்கொண்டார்.

You may also like

Leave a Comment