ஜெயிலர் பட டிக்கெட்டுகளை மாலையாக அணிந்த ரசிகர்…

by vignesh

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் இன்னும் சில தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தியாவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஜெயிலர் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. சர்வதேச அளவில் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து வருகின்றனர். நீண்ட காலங்களுக்கு பிறகு ரஜினியின் ஜெயிலர் படம் அதிகமான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் ரிலீசை திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் ரசிகர் ஒருவர் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஜெயிலர் படத்தின் டிக்கெட்டுகளை புக் செய்ததை வீடியோவாக வெளியிட்டுள்ளார். மேலும் இந்தப் படத்திற்காக தான் பெற்ற டிக்கெட்டுகளை மாலையாக அணிந்துக் கொண்டு தன்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தினார். அவரது டிக்கெட்டுகள் ஆளுயர மாலையாக அமைந்தது. மேலும் ஜெயிலர் பட போஸ்டரின் முன்பும் புகைப்படம் எடுத்துக் கொண்டு தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்தார்.

You may also like

Leave a Comment